Tuesday, December 28, 2004

கறுப்பு ஞாயிறு -26-12-2004

வருங்கால சச்சின்-ஆக வேண்டுமென -- சிறுவர்கள் ---
எதிர்காலம் திடகாத்தமாக இருக்க விரும்பிய -- நடைபாதையினர் --
அன்றாட உணவிற்கு வலைவிரிக்கும் -- மீனவர் ---
இயற்கை அழகினை ரசிக்க சென்ற -- இயற்கை பிரியர் --

என்று எவரையும் விட்டுவைக்காத "சுனாமி" ஆசியாவின் "சாவுமணி"

காலையில் நிலநடுக்க பீதியை ஏற்படுத்தி அநேகரை வீட்டைவிட்டு வெளியேற்றியது.
ஆனால்..கடல் கொந்தளிப்போ அநேகரை அவர்கள் தேகத்தைவிட்டே வெளியேற்றியது..

இதுத்தான் கடலின் இரத்தக்கொதிப்போ!!

என்றைக்குமே பார்க்கப்படாத சேனல்கள்..அன்று தொடர்ந்து நோக்கப்பட்டன.
ஓட்டுகளின் எண்ணிக்கைப்போல் நிமிடத்திற்கு இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது.
மாநிலங்களுக்கு மாநிலம் இறப்பு எண்ணிக்கை போட்டி!

வருங்கால தலைவர்கள் பலரை காவு வாங்கிய இயற்கை சீற்றமே!
உன் சீற்றத்தினை இதோடு சிறகொடித்துக்கொள்!
பல கனவோடு சிறகடித்து பறக்க விரும்பும் மானிடனின்கனவுகள் நிறைவேற - உன் சிறகினை இனி வளர்த்துக்கொள்ளாதே!!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சொல்ல இனி நீ உன் வாயை திறவாதே!!
எம்மதப்பேதமின்றி நாங்களே ஒருவருக்கொருவர் வாழ்த்திக்கொள்கிறோம்..

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

குகைமனிதன்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad - குகைமனிதன்

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது