Thursday, December 30, 2004

தேடல் ப(ச)டலம்

காதல் வளத்தேன்..காதல் வளத்தேன்...என
காதல் ஜோடிகள் கொஞ்சிக்கொண்டிருந்தன!

பொதுஇடத்தில் பொதுப்பொருளாகிவிட்டாள் - அவள்
"போதும்" என மனம் வராதவனாய் எதையோ தேடிக்கொண்டிருந்தான் - அவன்

நாற்சுவரிக்கிடையே செய்தால் - நறுமணம்
நால்பேருக்கிடையே செய்தால் - நாற்றம்

தங்கள் சுகத்தை துப்பட்டாவால் மூடமுற்பட்டனர் - எனினும்
ஜல்லடை வழியே பார்த்து மகிழ்ந்தனர் - கயவர்கள்

அவர்களை பிறர் கண்களிலிருந்து காப்பாற்ற - சுனாமி
என்ற போர்வையை விரித்தது கடல்!!

பாவம் அதற்கே தெரியாது அதனால்
ஏற்படும் விளைவினைப்பற்றி!!

இன்றும் இறந்த பிணங்களுக்கிடையே தேடுகிறோம்
போர்வையை கேட்டவனை!!! என் தம்பியை!!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad - குகைமனிதன்

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது