தேடல் ப(ச)டலம்
காதல் வளத்தேன்..காதல் வளத்தேன்...என
காதல் ஜோடிகள் கொஞ்சிக்கொண்டிருந்தன!
பொதுஇடத்தில் பொதுப்பொருளாகிவிட்டாள் - அவள்
"போதும்" என மனம் வராதவனாய் எதையோ தேடிக்கொண்டிருந்தான் - அவன்
நாற்சுவரிக்கிடையே செய்தால் - நறுமணம்
நால்பேருக்கிடையே செய்தால் - நாற்றம்
தங்கள் சுகத்தை துப்பட்டாவால் மூடமுற்பட்டனர் - எனினும்
ஜல்லடை வழியே பார்த்து மகிழ்ந்தனர் - கயவர்கள்
அவர்களை பிறர் கண்களிலிருந்து காப்பாற்ற - சுனாமி
என்ற போர்வையை விரித்தது கடல்!!
பாவம் அதற்கே தெரியாது அதனால்
ஏற்படும் விளைவினைப்பற்றி!!
இன்றும் இறந்த பிணங்களுக்கிடையே தேடுகிறோம்
போர்வையை கேட்டவனை!!! என் தம்பியை!!!
0 Comments:
Post a Comment
<< Home