Monday, July 25, 2005

யார் பிழை!!!!

யாரிடம் நாம் மிகுந்த நேசத்தை காட்டுகிறோமோ - அவர்களை
சீக்கிரம் இழக்க நேரிடும் - என்பதை
உணர்ந்தேன் பலரின் வாழ்க்கையில்...
அதனால்தானோ உன்னிடம் அன்பை செலுத்தாமல்
போய்விட்டேன் - அம்மா!!!

வீட்டின் கடைக்குட்டி என்றும் அம்மா செல்லம் - ஆனால்
என் வீட்டில் அது தலைகீழ்
என்னிடம் அன்பை பெறாததால் தானோ - அவள்
இப்படி மாறிவிட்டாள்?

குடும்பமாக ஊர் சுற்றி வந்து, கலைப்பில் அனைவரும் தூங்க
நீ மட்டும் குடும்பத்தினருக்காய் சமைக்கிறாய்!
சோம்பலினால் சாப்பிட மறுக்கும் போதும், குழுவாய் உட்கார வைத்து
உருண்டை சோறு உட்டுகிறாய்

ஒரே குடும்பமாய் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என ஆசைப்பட்டாய்
என் மனகாதலி அதற்கும் சம்மதித்திருப்பாள் ஆனோ நீயோ
அவள் குடும்பத்தை பிரித்துவிடுவாள் அவளை கட்டினால்
என்னை மறந்துவிடு என்றெல்லாம் புலம்பினாய்

மனதிற்கு பிடித்த ஒன்றை உன்னிடம் கேட்டேன் - நீயோ
அதை எனக்கு கொடுக்க மறுத்துவிட்டாய்.
என் மனக்கோட்டைக்குள் ஒலித்து வைத்திருந்த பொருளை
வெறொருவனுக்கு விட்டுவிட முடிவு செய்தேன் - உன் பேச்சால்

சிறுவயது முதற்கொண்டு அநேக பாடுகளை சகித்து என்னை வளர்தவளுக்கு
நான் எந்தவித கஷ்டமுமின்றி வாழவேண்டும் என்ற துடிப்பு
யாரோ காட்டிய கோட்டைப்பெண்ணை எனக்கு மணமுடிக்க எத்தனித்தாள்
என் கோட்டையை ஓட்டையாக்கி புகுந்தேன் அவள் கோட்டைக்குள்

கோட்டை பெண்ணிற்கு என் வீடு மண்மேடாய் தெரிய, குடும்பம் பிரிந்தது
இப்போது அழுகிறாள் என் அம்மா, அவள் துயர்தீர்க்க முடியாமல் நானும்தான்
காலம் செல்ல கோட்டையும் அக்குடும்பத்தை சேர்ந்ததல்ல என்பது புரிந்தது
பாவம் தினம் நான் படும் அவஸ்தையை கண்டு துடித்தாள்- அம்மா

ம்..கோட்டையில் வாழ்ந்தவலாம், சோறு இறங்காது பழங்கள்தான்
அழுகும் பழங்கள் போல் என் சேமிப்பு பாழாய் போனது!
இனி ஒன்றும் செய்யலாகாது பிரிந்தது பிரிந்ததுதானாகிட்டது
மன்னித்துவிடு அம்மா இது என் பிழையல்ல! குழத்தை அழுகிறது
சிறிது நேரம் கழித்து அழைகிறேன்!! போனில் அழுகுரல் நீடித்த்து!!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad - குகைமனிதன்

Thursday, February 03, 2005

சந்திப்போமா...

என்னை காதலித்தவர்கள் பலர்
என்னால் காதலிக்கப்பட்டவர்கள் பலர்
ஆனால் நான் கட்டினதோ -
இவ்விரண்டில் சேர்க்கப்படாத ஒருவரை...

என்னடா இவ கவிதையா அடிக்கித்தள்ளுறான்னு கடுப்பாகாம படிங்க..

நான் ஒரு நடுதர குடும்பத்தில் பிறந்ந்தவன். பள்ளியிலும் சரி பிற இடங்களிலும் சரி அதிக விளையாட்டுப்பிள்ளையாய் நாட்களை கழித்தேன். வகுப்பு மாணவர்கள் முதல் வகுப்பு ஆசிரியர்கள் வரை
எவரையும் விடாமல் கிண்டலடிப்பது தான் என் பொழுதுபோக்கு.

அடிக்கடி என் ஆலயத்தில் சந்தித்த ஒரு பெண்ணை மனதில் நேசித்தேன், அவளும் என்னுடன் நண்பியாக பழகுவாள். என் மனதில் உள்ள எண்ண ஓட்டங்கள் அவளுக்குத்தெரியாது. நாட்கள் கடக்க அவளின் செய்கையில் பல மாற்றங்களை நான் உணர்ந்தேன். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது, என்னை அடிக்கடி ஓரக்கண்ணால் கண்காணிப்பது என்று அவளின் செய்கையில் கண்டும், அவை என் மன பிரம்மை என அவற்றை பொறுப்பேடுப்பதில்லை.சுமார் 3 வருடங்கள் காலத்தை இவ்வாறே ஓட்டினேன்.

ஓர் நாள் நான் படிக்கும் பள்ளியில் சேர Admition form கையில் வைத்துக்கொண்டிருந்தாள்.
உங்க school-ல கோச்சிங்லா எப்படி?
ம்..ம் நல்லா இருக்கு..என்ன நீ இங்க சேர போறீயா?..
ஆமா என்றாள்.
அடுத்த வாரத்திலேயே..School Uniform அணிந்து, இரட்டை ஜடையுடன் கண்ணிற்கு குளூமையாக Hi என்று என் முன் நின்றாள்.

சுமார் 1000 பேர் படிக்கும் அப்பள்ளியில், அழகிகளை வரிசைப்படுத்தினால் 5-ற்குள் அவளை காணலாம். விடலை பருவ பையன்களின் கண் அவள் மீதும் பட்டது. எனக்கு அவளை முன்னமே தெரியும் என்பதினாலேயும், அடிக்கடி நாங்கள் சந்தித்து பேசுவதினாலேயும், மாணவர்களே எங்களுக்குள் தொடர்பு
இருப்பதாய் கணித்துக்கொண்டனர்.

ஓர் நாள் என் நண்பன் என்னிடம் வந்து,
டேய் நீ அந்த பொண்ண லவ் பண்றீயா? என கேட்டான்.
ஏண்டா ஏன் கேக்குற? ஒண்ணுல்ல என் friend அவள லவ் பண்ண போறான்னா. நீ பண்ணாட்டி ஒரு ட்ரை பண்ணலாம்னு உன்ன கேக்க சொன்னா?
அதற்கு உடனே பதில் சொல்ல முடியாமல் நான் திணற அருகில் இருந்த என் நண்பன் ஆமாண்டா அவ அவள லவ் பண்றான். அவகிட்ட சொல்லிடு.
பல மாணவர்களிடம் இன்றும் ஒரு கலாச்சாரம் பரயுள்ளது போற்றுதற்குரியது.மாற்றானின் காதலியை எவறும் தீண்டமாட்டார்கள். எனவே அவளின் பாதுகாப்பு வேண்டி, ஆமாம் என நானும் தலையசைத்தேன்.

எங்கு நான் கூறியதை அவளிடம் சொல்லி கேட்கப்போகிறார்களோ என பயந்து அன்று அவள் வீட்டுக்குச்செல்லும் பாதையில் அவளுடன் மிதிவண்டியில் செல்ல தயாரானேன். எப்படி மேலே நடந்த விஷயத்தை அவளிடம் கூறி விவரிப்பது என தெரியவில்லை.
கெரி நா ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்கக்கூடாது
ம்..சொல்லுங்க.
நீ யாராச்சையும் லவ் பண்றீயா?
ஒரு கணம் என்னை மேலிருந்து கீழாக பார்த்த அவள்..ம்..இல்ல..ஏன் கேக்குறீங்க?.
அவளின் பார்வையில் கோபம் வெளிப்பட்டதை உணர முடிந்தது..
இல்ல என் friend உன்ன லவ் பண்ண போறதா சொன்னா..அதான் நா உன்ன லவ் பண்றதா அவகிட்ட சொல்லிட்ட. யாராச்சிம் கேட்டா அதுமாறியே சொல்லு..ஆனா நம்ப friend ஆகவே இருப்போம்.
அவளின் முகம் சிவந்தது.
ஐயோ நா உன்ன லவ் பண்ணல அவங்ககிட்ட இருந்து காப்பாத்தத்தான் அப்படி சொன்னேன், நம்ப friends ஆவே இருப்போம்.
அவள் சற்று தெளிந்தவளாய்,
எனக்கு எத்தனையோ பேர் லவ் லட்டர் கொடுத்துருக்காங்க. ஆனா நா யாருக்கும் YES சொன்னது இல்ல.
ஓ அப்படியா..நா அவ வந்து உன்ன தொந்தரவு கொடுக்கக் கூடாதுன்னுத்தான் அப்படி சொன்ன.
இப்படியே பேசிக்கொண்டு அவளின் வீட்டிற்கு அருகில் வந்துவிட்டோம்.
சரி அப்போ நா கிளம்புறேன் என என் cycle-ஐ 90 டிகிரி திருப்பினேன்.

டென் உனக்கு மட்டும் நா YES சொல்ற, நாளைக்கு ஆலயத்துல சந்திப்போம். என அவளின் சைக்கிளை வேகமாகா வீட்டிற்கு செலுத்தினாள்.

நானோ ஒன்றும் புரியாதவனாய், உள்ளூற குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்தேன்.அன்று இரவு முழுதும் அதே கற்பனை அவள் என்ன சொல்ல போறா..ஒன்றும் விளங்கவில்லை. அவளை சந்திக்க தயாரானேன்
அவளை கண்டதும் ஒருவித திகில் என்னை தாக்கியது. இவ்வளவு நாட்கள் பழகிய, பேசிய அதே பெண்ணிடம் தான் பேசப்போகிறோம் என்றாலும் ஒருவித எதிர்ப்பாப்பு கலந்த தவப்பில் தத்தளித்தேன்.

தனியே பேசுவதற்கு ஏற்ற இடத்திற்கு வந்தோம். அவள் சடாளென I LOVE YOU என்றாள். நானும் ME TOO என்றேன். வெளியே யாரிடமும் சொல்லவேண்டாம் என்றாள்.சரி என தலையசைத்தேன். சரி நாளைக்கு ஆலயம் முடிந்ததும் நாம் சந்திப்போம் என்றேன்.

அறியா வயதில் ஆசைகள் அலைகளாய் அடிக்க அதில் சேர்ந்து என்னோடு கைப்பிடித்தோர்களை இன்றும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். மனதில் வண்ணத்துப்பூச்சிகள் வட்டமடித்த நாட்கள் அவை. இன்றும் அவளை சந்திக்கிறேன் அவளுக்கே தெரியாமல், பாவம் அவள் மட்டும் இன்றும் கன்னியாய் நானோ கையில் குழந்தையுடன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad - குகைமனிதன்

Thursday, December 30, 2004

தேடல் ப(ச)டலம்

காதல் வளத்தேன்..காதல் வளத்தேன்...என
காதல் ஜோடிகள் கொஞ்சிக்கொண்டிருந்தன!

பொதுஇடத்தில் பொதுப்பொருளாகிவிட்டாள் - அவள்
"போதும்" என மனம் வராதவனாய் எதையோ தேடிக்கொண்டிருந்தான் - அவன்

நாற்சுவரிக்கிடையே செய்தால் - நறுமணம்
நால்பேருக்கிடையே செய்தால் - நாற்றம்

தங்கள் சுகத்தை துப்பட்டாவால் மூடமுற்பட்டனர் - எனினும்
ஜல்லடை வழியே பார்த்து மகிழ்ந்தனர் - கயவர்கள்

அவர்களை பிறர் கண்களிலிருந்து காப்பாற்ற - சுனாமி
என்ற போர்வையை விரித்தது கடல்!!

பாவம் அதற்கே தெரியாது அதனால்
ஏற்படும் விளைவினைப்பற்றி!!

இன்றும் இறந்த பிணங்களுக்கிடையே தேடுகிறோம்
போர்வையை கேட்டவனை!!! என் தம்பியை!!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad - குகைமனிதன்

சுனாமி - கார்கில்

இந்தியாவின் உயரத்தை குறைக்க முயல்வது யார்?
சுனாமியா?? இல்லை கார்கில் போரா??

குடும்பத்தில் ஒருவரை கார்கிலில் விட்டோம்.
குடும்பத்தில் ஒருவரை சுனாமி விட்டுவைத்தது.

ஒரே கண்ணாடியாய் இருந்த இந்தியாவை
கிழே போட்டுடைத்து யார்?...ஓ..மாநிலங்கள்!!!

நாங்கள் என்னத்தான் இனம், மொழி என வேறுப்பட்டிருந்தாலும்,
பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரே பிம்பத்தை காட்டும் உடைந்த கண்ணாடியைப்போல் "இந்தியர்" என்ற ஒரே
ஒருமைப்பாட்டுனர்வோடு இருக்கின்றோம்!!

இயற்கையோ, பிறர்கையோ இந்தியாவில் நுழையவிடமாட்டோம்!
சுனாமியை எதிர்த்து, போர்வீரர்களாய் நின்று மடிந்த வீரநெஞ்சங்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

நீதி கேட்டு இனி இயற்கையிடம் கைகட்டமுடியாது.
நிதி திரட்டுவோம்! இந்தியாவை வளர்ப்போம்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad - குகைமனிதன்

Tuesday, December 28, 2004

கறுப்பு ஞாயிறு -26-12-2004

வருங்கால சச்சின்-ஆக வேண்டுமென -- சிறுவர்கள் ---
எதிர்காலம் திடகாத்தமாக இருக்க விரும்பிய -- நடைபாதையினர் --
அன்றாட உணவிற்கு வலைவிரிக்கும் -- மீனவர் ---
இயற்கை அழகினை ரசிக்க சென்ற -- இயற்கை பிரியர் --

என்று எவரையும் விட்டுவைக்காத "சுனாமி" ஆசியாவின் "சாவுமணி"

காலையில் நிலநடுக்க பீதியை ஏற்படுத்தி அநேகரை வீட்டைவிட்டு வெளியேற்றியது.
ஆனால்..கடல் கொந்தளிப்போ அநேகரை அவர்கள் தேகத்தைவிட்டே வெளியேற்றியது..

இதுத்தான் கடலின் இரத்தக்கொதிப்போ!!

என்றைக்குமே பார்க்கப்படாத சேனல்கள்..அன்று தொடர்ந்து நோக்கப்பட்டன.
ஓட்டுகளின் எண்ணிக்கைப்போல் நிமிடத்திற்கு இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது.
மாநிலங்களுக்கு மாநிலம் இறப்பு எண்ணிக்கை போட்டி!

வருங்கால தலைவர்கள் பலரை காவு வாங்கிய இயற்கை சீற்றமே!
உன் சீற்றத்தினை இதோடு சிறகொடித்துக்கொள்!
பல கனவோடு சிறகடித்து பறக்க விரும்பும் மானிடனின்கனவுகள் நிறைவேற - உன் சிறகினை இனி வளர்த்துக்கொள்ளாதே!!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சொல்ல இனி நீ உன் வாயை திறவாதே!!
எம்மதப்பேதமின்றி நாங்களே ஒருவருக்கொருவர் வாழ்த்திக்கொள்கிறோம்..

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

குகைமனிதன்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad - குகைமனிதன்

Tuesday, December 21, 2004

கற்பனை ஹிரோக்கள் (ஹிரோயின்கள்)

இன்றைய காலக்கட்டத்தில் மனிதன் கற்பனை உலகில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டிருக்கிறான், தன் கற்பனைகளையெல்லாம் நிஜமாக்கி மகிழ்கிறான். பறவைப்போல் பறப்பேன் என்ற கற்பனையில் பிறந்ததுதான் விமானம், என்று மனிதனின் கற்பனைவளத்தை பலவாறுப்போற்றினாலும், குறிப்பாக சிலரின் (என்னையும் சேர்த்து) கற்பனைகள் நம்மால் நினைத்துப்பார்க்கும் போது மிகவும் கேலிக்குரியதாய் மாறிவிடுகிறது. குறிப்பாக கிறிஸ்தவ வாலிபர்களின் கற்பனைக்கூட குறிப்பிடத்தக்கதுதான்.
முழுதாய் பள்ளிப்படிப்பையே முடிக்காத இவனின் கற்பனை மனைவி குறைந்தப்பட்சம் ஐஸ்வர்யாராயின் தங்கையாக இருக்க வேண்டுமாம், அதுவும் சரளமாய் ஆங்கிலம் பேசத்தெரியவேண்டும்.

அப்பத்தான பிரதர் ஊழியத்துல வெளியூர் போகும்போது உதவியாயிருக்கும்..

இப்பேர்ப்பட்டவர்களுக்கு ஐஸ்வர்யாராய் கிடைக்கமாட்டாள், மாறாக ஐஸ் விற்பவள் தான் கிடைப்பாள்.

அதற்காக படித்தவர்களுக்கெல்லாம்தான் அழகான பெண்கள் அமைவார்கள் என அர்த்தமில்லை, உங்களின் கற்பனை வளத்தினை இதில் சற்று குறைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

இன்றைய சூழ்நிலையில் வாலிபர்கள் - ஏன் அனைவரும்தான் - அழகான மாடல் அழகிகளை பத்திரிக்கைகளிலும், செய்தித்தாள்களிலும் பார்க்க நேருடிகிறது. இந்த மாதிரியான நேரங்களில் நம் மனதின் கற்பனை.."கட்டினா இதுமாதிரியானப்பொண்ணத்தா கட்டணும்" என்னும் சபலம் தோன்றினால், அதனை நொடியில் மறந்துவிட வேண்டும். மாறாக அப்பெண்ணையே மனதில் கற்பனை தேவதையாய் நினைத்துக்கொண்டிருந்தால், பிற்காலத்தில் கட்டின மனைவியை அவளுடன் ஒப்பிடும்போது மனவிரிசலை ஏற்படுத்திவிடும்.

பெண்கள் மட்டும் கற்பனையில் இளைத்தவர்களா என்ன? இன்றைய பெரும்பாலான பெண்களின் கற்பனை ஹீரோக்கள் மட்டை வீச்சாளர்களும், சுழற்பந்து வீசுபவர்களுமாகிவிட்டது வெட்கக்கேடு. தங்களின் வருங்கால ஹீரோ டிராவிட் போல, சச்சின் போல இருக்கவேண்டும் என்ற ஆசையில் தாங்கள் வாங்கும் நோட்டில் கூட அவர்களின் புகைப்படத்தை புதைத்து வாங்குகின்றனர்.

பிறகு...தங்களுக்கு கிடைப்பவன் கில்லி கூட விளையாட தெரியாத, "சோமாலியா வாலிபன்" என வெட்கி தலைகுனிகின்றனர்.

கற்பனை உலகில் மிதந்துக்கொண்டிருக்கும் அனைவரும், நிஜ உலகிற்கு வாருங்கள். கற்பனை நிறைவேறவில்லை என சோராமல் கருத்துடன் கர்த்தனை தேடுங்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad - குகைமனிதன்
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது